தன் அம்மாவைப் பற்றி பிறர் நல்லதை கூறும் போது அஞ்சலைக்குப் பெருமையாக இருக்கும். செல்டிங் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவள் இராஜம் அவளுடைய அப்பா அந்தத்தோட்டத்தின் மேனேஜர். தன் ஒரே பிள்ளையான இராஜத்தைச் செல்லமாகவும் , கண்டிப்பாகவும் வளர்த்தார் மேனேஜர் மோகன். அன்பும் கண்டிப்பும் தன் மகள் மீது மட்டும் காட்டுபவரல்ல மேனேஜர் மோகன் தன் தோட்டப் பாட்டாளிகளிடமும் அன்பு கண்டிப்பும் அக்கறையும் கொண்டவர். “ என்ன பெருமாள் , இன்னும் உன் பொண்டாட்டிய அடிக்கிறியா “? “ஹி ஹி… இல்லிங்க சார், நீங்க அறிவுரை சொன்னதலிருந்து நல்லாப் பாத்துக்கிறேன் சார்” தலையைச் சொரிந்து சற்று முதுகு குனிந்து கொண்டே மருதன் தன் மேனேஜர் மீது வைத்த மரியாதை வெளிபடுத்தினான். “ அதான பார்த்தேன் , பொண்டாட்டி என்பவ நம் அம்மாவுக்கு அப்புறம் நம்மள கவனிக்கிறவ ‘ அதனால அவங்களுக்கு நாம மரியாதையும் அன்பும் கொடுக்கனும் தெரியுதா “ ?